விழுப்புரம் மாவட்டத்தில் ஏறுமுகத்தில் கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;

Update: 2021-05-29 14:46 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 33,183 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 239 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

சனிக்கிழமை மட்டும் 327 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 28,108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 4,836 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News