விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 499 பேருக்கு கொரோனா தொற்று; இருவர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இருவர் பலியாகியுள்ளனர்

Update: 2021-05-23 15:49 GMT

கொரோனா ( மாதிரி படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 499 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 29,310 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 203 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 338 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 25,631 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 3476 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News