விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்தது கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது.

Update: 2021-06-26 16:29 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 42,208 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 328 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

சனிக்கிழமை மட்டும் 132 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 41,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 586 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News