விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறைந்து வருகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை பயமுறுத்திய கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது;
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 64 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 42,911 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று உயிரிழப்பு இல்லை,இதுவரை 333 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,
புதன்கிழமை மட்டும் 53 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,029 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 549 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்