விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டனர். 404 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது

Update: 2021-06-10 16:29 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 404 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 38,935 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 302 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

வியாழக்கிழமை மட்டும் 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 34,935 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 4,041 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News