விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

Update: 2021-07-22 15:26 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று, 38 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது.  இதுவரை 43,514 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழப்பு நேரிடவில்லை. எனினும், மாவட்டத்தில் இதுவரை 337 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்று மட்டும் 38 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 42,682 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 495 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News