விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரானா
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 500ஐ நெருங்கும் கொரானா.;
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை 61 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 15,999, பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 393 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது, மேலும் கடந்த 1ந்தேதி முதல் 12 ந்தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில்11 நாட்களில் 480 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.