விழுப்புரம் மாவட்டத்தில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2021-10-09 16:49 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது

இறுதி வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 84.66 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 87.29 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 8622 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 84.74 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 84.94 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 84.47 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த இறுதி வாக்குபதிவு 85.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News