விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16,87,394 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16லட்சத்து,87 ஆயிரத்து,394 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2021-11-16 16:43 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக கொரோனா தொற்று குறைந்து இன்று ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 7லட்சத்து,68ஆயிரத்து,369 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது,

(15/11/2021) திங்கட்கிழமை மட்டும் ஆயிரத்து,522 பேருக்கு மாதிரி எடுத்ததில் அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதியானது, அதனால் மாவட்டத்தில் பாதிப்பு  0.20 சதவீதம் ஆகும், இன்று செவ்வாய்க்கிழமை (16/11/21) ஆயிரத்து 575 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.10 சதவீதமாக உள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை, அதற்கானஅபராத தொகையும் வசூலிக்க படவில்லை,

இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88 ஆயிரத்து,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர், இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே 91 லட்சத்து,74 ஆயிரத்து, 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது,

மாவட்டத்தில் ஒரு லட்சத்து,56ஆயிரத்து,505 தடுப்பூசி இருப்பு உள்ளது, அதில் இன்று 16/11/21 செவ்வாய்க்கிழமை மட்டும் 12 ஆயிரத்து 714 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்,

இதுவரை மாவட்டத்தில் 16 லட்சத்து 87ஆயிரத்து 374 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News