உள்ளாட்சித்தேர்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் 16790 பேர் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு இதுவரை 16790 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

Update: 2021-09-21 14:33 GMT

கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரேவதி கணபதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஒன்றிய கவுன்சிலர், 688 ஊராட்சி மன்றத் தலைவர், 5088 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 6097 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று 1838 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 25 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 180 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 213 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1420 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்டத்தில் 16790 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 86 பேரும்,ஒன்றிய கவுன்சிலருக்கு 970 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 3160 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 12574 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News