சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 500க்கும் மேற்பட்டோர் கைது

Update: 2021-02-23 14:00 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட பொருளாளர் ஜெயந்தி தலைமையில், கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News