பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிய உத்தரவு

தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிவு செய்யவும், தடுப்பு பிரிவினர் கண்காணிக்கவும் உத்தரவு

Update: 2021-06-19 13:15 GMT

தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் . அதனை குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு பிரிவு கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது .

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்கள் , பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது . அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் வரையில் சிக்குகின்றனர். அதோடு பெரும்பாலான காவல் நிலையங்களில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் கொடுத்தல் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் அந்த வழக்கினை சரியாக விசாரிப்பதில்லை என்ற புகார்கள் அடிக்கடி எழுவது உண்டு .

அதேசமயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் குற்றங்கள் , பள்ளிகளில் நடந்த பாலியல் குற்றங்கள் என்று தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது . மேலும் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து ஆன்லைனிலும் புகார்கள் அளித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டால் , அந்த புகார்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இதனை அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர் . அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான புகார்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறதா ? என்று கண்காணித்து வருகிறோம் என்று வேலூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு டிஎஸ்பி சரவணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News