வேலூர் மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசு

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள்

Update: 2021-10-10 02:49 GMT

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வாஷிங் மிஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் நடக்கும் முகாம்களில் 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு பொதுமக்களை வரவழைக்கும் வகையில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க வேலூர் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில், முதல் பரிசாக ஒருவருக்கு வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக ஒருவருக்கு மிக்சி, 3-ம் பரிசாக ஒருவருக்கு செல்போன் ஆகியவை வழங்கப்படும். அதைத்தவிர தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு வழங்க மண்டலம் வாரியாக டோக்கன் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது

Tags:    

Similar News