ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளி: மீட்டு கொடுத்த சைபர்கிரைம் போலீசார்
வேலூரில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை இழந்த வெல்டிங் தொழிலாளியின் பணத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை;
வேலூர் மாவட்டம் வசூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மூலம் இவருக்கு தெரியாமல் வங்கி கணக்கிலிருந்து ரூ.22000/- இரண்டு தவணைகளாக எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வினோத்குமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் அவர் இழந்த ரூ.22000/ பணத்தை மீட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ்கண்ணன் மூலமாக வெல்டிங் தொழிலாளியிடம் ஒப்படைத்தனர்.