வேலூர் மாநராட்சிக்குட்பட்ட கஸ்பா, வசந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று(பிப்-28) இரவு 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தெற்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் பொது மக்கள் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சங்கரை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செயது சங்கர் நடந்து செல்லும்போது கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது மதுபோதையில் விழுந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.