யாதவ சமுதாயத்தினருக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு வேலூரில் கோகுலம் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும், ஆணையம் அமைக்கும் வரை யாதவ சமுதாயத்தினருக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரியை முன் வைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கோகுலம் மக்கள் கட்சியினை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.