மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

மனைவியை கொல்ல முயன்றதாக மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் கைது. ஏற்க்கனவே இரண்டு திருமணம் செய்திருந்தது அம்பலம்.

Update: 2021-02-14 18:07 GMT

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் நரேஷ் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் டிட்டர் லைன் பகுதியை சேர்ந்த துர்கா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். திருமணத்தின் போது நரேஷுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும் சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நரேஷுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்தது துர்காதேவிக்கு அண்மையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து துர்காதேவி நரேஷிடம் கேட்ட போது மேலும் ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் நீ வாழ முடியும் என மிரட்டியுள்ளன். மேலும் அவருடைய நகைகளையும் பிடுங்கி அடகு வைத்துள்ளன். தொடர்ந்து அவரின் மாமியார் லலிதா, கணவர் நரேஷ் அவரின் உறவினர் மகேஷ் ஆகிய மூன்று பேரும் துர்காதேவியை கொல்ல முயன்றதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துர்காதேவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வேலூர் மகளிர் காவல் துறையினர் நரேஷை பெண்கள் வன் கொடுமை சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நரேஷை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News