காட்பாடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்

காட்பாடி டிகே.புரம் பகுதியில் விநியோகம் செய்யும் தண்ணீர் நிறம்மாறி, அசுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றசாட்டு;

Update: 2021-11-23 15:53 GMT

நிறம் மாறியிருக்கும் விநியோகிக்கப்பட்ட தண்ணீர் 

தொடர்மழை காரணமாக பாலாற்றில் ஏற்பட வெள்ளப்பெருக்கால், வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்துள்ளது. ஆம்பூர் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைப்லைன் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் வரை குடிநீர் சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலூரில் உள்ள  நீராதாரத்தைக் கொண்டு குடிநீர் விநியோகிக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாநகராட்சியில் மண்டல வாரியாக உள்ள குடிநீர் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் மாநகராட்சி 1வது மண்டலம் காட்பாடி, டிகே.புரம் பகுதிக்கு விநியோகம் செய்யும் தண்ணீர் அசுத்தமாக உள்ளதால் அதனை பயன்படுத்த முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். காட்பாடி, விருதம்பட்டு மோட்டூர், காந்தி நகர் ஆகிய பகுதிகளிலும்  இதே போன்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது

Tags:    

Similar News