காட்பாடியில் கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ப்ரீத் ஜெயக்குமார் கொரோனா தொற்றுக்கு பலியானார்

Update: 2021-06-06 03:15 GMT

காட்பாடியை சேர்ந்தவர் ப்ரீத் ஜெயக்குமார் (வயது 55). இவர் காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

ப்ரீத் ஜெயக்குமார் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மேரி பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News