லஞ்சம் வாங்கி கைதான பொன்னை கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்.

லஞ்சம் வாங்கி கைதான பெண் கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

Update: 2021-06-09 16:36 GMT

வேலூர் மாவட்டம், பொன்னை கிராம நிர்வாக அலுவலராக கவிதா (வயது 32) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர், பொன்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வேலூர் சப் கலெக்டர் கணேஷ், லஞ்சம் வாங்கிய பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News