கே.வி.குப்பம் அருகே ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு

கே.வி.குப்பம் அருகே ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் தங்கநகை, வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு

Update: 2021-12-15 05:18 GMT

கோயிலில் கொள்ளை

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 64). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். இவர் வீட்டை பூட்டிக் கொண்டு வேலூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், . வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 கிராம் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரி20 கிராம் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.ன் பேரில்  கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News