பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு : குடியிருப்பு பகுதியில் வெள்ளம்

பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

Update: 2021-10-14 16:23 GMT

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

கடந்த 20 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மோர்தானா அணை நிரம்பி,  அதன் இணைப்பு கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால்,  கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் பின்புறம் உள்ள ரங்கநாதர் நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் மோர்தானா கால்வாய் அருகே செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீரும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.

தகவலறிந்ததும் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். கலெக்டர் குமராவேல் பாண்டியன், சப்-கலெக்டர், அணைக்கட்டு வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகார்கள் உள்ளிட்டோர் மோர்தானா கால்வாயை ஆய்வு செய்தனர். அப்போது கால்வாய் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ரங்கநாதர் நகரில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News