இன்றுடன் நிறைவுபெறும் திருவண்ணாமலையில் மகா தீபம்

தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்

Update: 2023-12-06 06:20 GMT

திருவண்ணாமலை மகாதீபம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது,

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 26ம் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் காட்சி தரும் மகா தீபம் இன்றுடன் புதன்கிழமை நிறைவடைகிறது.

தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

தொடர்ந்து வருகிற 27ம் தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News