செண்பகத்தோப்பு அணை திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

செண்பகத்தோப்பு அணை இன்று திறக்கப்பட உள்ளதால் கமண்டல நதி கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2021-10-13 06:04 GMT

செண்பகத்தோப்பு அணை

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணை தற்போது பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்களாக  பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் செண்பகத்தோப்பு அணை இன்று மதியத்திற்கு மேல் திறக்கப்பட உள்ளது,  எனவே கமண்டல நதி கரையோரம் உள்ள  மக்கள் எச்சரிக்கையாக இருக்க பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News