போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2021-11-24 13:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில்  நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

இதன்படி போளூர் பேருந்து நிலையம்,  ஆர் ஜி சக்தி மஹால்,  அல்லி நகர்,  கண்ணன் தெரு , பச்சையப்பன் தெரு ,   சிவராஜ் நகர்,  வீரப்பன் நகர் துணை சுகாதார நிலையம்,  ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

Tags:    

Similar News