ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கல்

போளூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை எம்எல்ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

Update: 2021-08-29 12:32 GMT

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கும் எம்எல்ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

திருவண்ணாமலை  போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேளூர், பேட்டை, காலசமுத்திரம், சந்தவாசல், வாழியூர் மற்றும் களம்பூர் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

இந்த ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் சேவா இன்டர்நேஷனல் சென்னை சென்டர் பார் குளோபல் டிரஸ்ட், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.

உடன்  போளூர் வட்டார மருத்துவ அலுவலர் அலுவலர் டாக்டர் சுந்தர், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாவட்ட செயலாளர்  பழனி, மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News