சேத்துப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு

சேத்துப்பட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-06-18 08:12 GMT

அரசுப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேலதாங்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள்,  சென்னை அண்ணா நகர் அரிமா சங்கம் இணைந்து பள்ளிக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான கணினிகள் நன்கொடையாக வழங்கினர்.

இந்த கணினிகளை கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன வகுப்பறையை ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அரிமா சங்க ஆளுநர் மாணிக்கம் , மண்டலத் தலைவர் சங்கர், பள்ளியின் முன்னாள் மாணவரும். மாவட்ட காங்கிரஸ் தலைவருமான அண்ணாமலை, தலைமை ஆசிரியர் தணிகைமலை மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News