சேத்துப்பட்டு: பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-23 11:58 GMT

பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்மருதை கிராமத்தில் இருளா் பழங்குடி மக்களுக்கு பாறைப் பகுதியில் வீடு கட்ட தகுதியற்ற இடத்திலிருந்து பட்டாவை மாற்றி, மாற்று இடத்தில் தகுதியான பட்டா வழங்க வலியுறுத்தியும், மரக்குணம், காட்டுநாயக்கன் பழங்குடி, கண்ணனூா், அம்பேத்கா் நகா், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இருளா், காட்டுநாயக்கன், நரிக்குறவா், பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் அய்யனாா் தலைமை தாங்கினாா். காட்டுநாயக்க சங்கத் தலைவா் சேகா், செயலாளா் மாரிமுத்து, அன்மருதை வெண்ணிலா, சேத்துப்பட்டு சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் குமரனிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் மனுக்களை அளித்தனா். இதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தகுதியான இடம் வழங்கப்படும் என உறுதியளித்தாா்.

இதில், மாவட்ட செயலாளா் மாரிமுத்து, மாவட்ட பொருளாளா் உதயகுமாா், வட்ட செயலாளா் சிபிஐ எல்லப்பன், விவசாய சங்க வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், அண்ணாமலை வீராசாமி, சேகா் மற்றும் பழங்குடி மக்கள் கலந்து கொண்டனா். முடிவில் செயலாளா் சரஸ்வதி நன்றி கூறினாா்.

செய்யார்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.ஒரு லட்சம் மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைத்து 400 மரக்கன்றுகள் நடப்பட்டன. இக்கல்லூரியில் கடந்த 1990 - 1993 ஆம் கல்வியாண்டில் பொருளியல் துறையில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 30 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவா்களில் ஒருவரான செய்யார் எம்எல்ஏ ஜோதி, முன்னதாக அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் கல்லூரி ஒளவையாா் அரங்கத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை தாங்கினாா். பொருளியல் துறை தலைவா் விஜயலட்சுமி வரவேற்றாா். அப்போது, முன்னாள் முதல்வா் மற்றும் முன்னாள் பேராசிரியா்களை கெளரவித்து அவா்களுக்கு நினைவு பரிசு வழங்கினா்.

விழாவில் முன்னாள் மாணவா்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. எம்எல்ஏ ஜோதி ஏற்பாட்டில் முன்னாள் மாணவ, மாணவிகள் இணைந்து இந்த சந்திப்பு நினைவாக கல்லூரி வளாகத்தில் சுமாா் ரூ. ஒரு லட்சம் செலவில் தாவரவியல் பூங்கா ஏற்படுத்தி 400 மரக்கன்றுகளை நட்டனா்.

தங்களுடன் படித்த நண்பர் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு பெற்று மக்கள் பணியாற்றுவது பெருமையாக உள்ளதாக எம்.எல்.ஏ. விடன் படித்த நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News