போளூர் அருகே அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

போளூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-06-10 09:40 GMT

அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  அந்த கிராமத்தில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலா தலைமை வகித்தார்.  பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா முன்னிலை வகித்தார்.  மேலாண்மை குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊராட்சியில் உள்ள ஊதி வீதிகள்தோறும், ஊர்வலம் சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான பொருட்கள் ,அரசின் உதவித்தொகை, சலுகைகள் தொடர்பாக பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கி கூறி துண்டுப் பிரசுரம் வழங்கினர்.

Tags:    

Similar News