பராமரிப்பு பணி காரணமாக நாளை போளூர் பகுதியில் மின் தடை

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (7.10.2021) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் மின் தடை.

Update: 2021-10-06 06:18 GMT

போளூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்   நாளை மின் தடை, மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பிற்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.

போளூர் நகரம், அத்திமூர், கலசப்பாக்கம், ராந்தம், முருகா பாடி, மண்டகொளத்தூர், ஜடதாரிக்குப்பம்,பெலசூர், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர்  அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News