வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடியவர் கைது

அன்மருதை கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-30 14:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, அன்மருதை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முனிரத்தினம், வயது 69 என்பவர் கடந்த 25.ஆம் தேதி தனது அண்ணன் பேத்தி திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்,

திருமணம் முடிந்து மறுநாள் 26.ம் தேதி மாலை சென்னையிலிருந்து திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, இரும்பு பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடிவந்தனர்.அதே ஊரைச் சேர்ந்த வரதன் மகன் ராதாகிருஷ்ணன், வயது 39 என்பவர் வீட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடித்து  கைது செய்தனர்.

அவரிடமிருந்து 85 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags:    

Similar News