தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது

Update: 2021-06-25 08:28 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசம்பட்டு, நம்பேடு, அல்லியந்தல் ஆகிய பள்ளிகளில், இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் மாணவர்களுக்கு சென்னை சுடர் கல்வி இயக்கம் மூலமாக கைக்கணினி இலவசமாக வழங்கப்பட்டது.  இதன் மூலம் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி கற்க உதவி செய்தனர்.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள், சுடர் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News