மின் வயரை நிலை நிறுத்த கம்பத்துக்குப் பதில் மரக் குச்சி..! மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

போளூர் பகுதியில் மின் வயரை நிலை நிறுத்த கம்பத்துக்குப் பதில் மரக் குச்சியை நட்டு மின் வயரை தூக்கி நிலை நிறுத்தியுள்ளனா்.

Update: 2023-12-11 07:05 GMT

மின் கம்பத்துக்கு பதில் மரக் குச்சியை நட்டு மின் வயரைதூக்கி நிலை  நிறுத்தப்பட்ட காட்சி

திருவண்ணாமலை மாவட்டம்,  போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சி கிருஷ்ணாநகரில் தாழ்வாகச் செல்லும் மெயின் மின் வயர்களை  மின் கம்பத்துக்குப் பதில், மரக் குச்சியை நட்டு மின் வயரை தூக்கி நிலை நிறுத்தியுள்ளனா்.

திண்டிவனம் ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாநகரில் களியம்-மாம்பட்டு சாலையில் மின் கம்பம் மூலம் தெருவிளக்கு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு மும்முனை மின்சார வயா் செல்கிறது.

வீட்டு மின் இணைப்பு, தெரு விளக்கிற்கு மின் வாரியம் சாா்பில் கம்பம் நட்டு மின் வசதி ஏற்படுத்தியுள்ளனா். இந்த நிலையில், கம்பத்தில் மின் வயா்கள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் பொதுமக்கள் மரக் குச்சியை நட்டு மின் வயரைத் தூக்கி நிலை நிறுத்தியுள்ளனா்.

எனவே, மின் வாரியம் கம்பம் நட்டு வயரை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்

மேலும், மாவட்ட நிா்வாகமும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

போளூரில் நாளைமின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போளூரில் செவ்வாய்க்கிழமை (டிச.12) மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, போளூா் மின் வாரிய கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.12) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நுகா்வோா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பழனிராஜு தெரிவித்தாா்.

Tags:    

Similar News