முக கவசம் அணியாத ஓட்டுனர்‌, நடத்துனருக்கு அபராதம் விதிப்பு

போளூரில்‌ முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

Update: 2022-01-06 06:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம்‌ போளூரில்‌ காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌ அறிவழகன்‌ தலைமையில்‌, பேருந்து நிலையம்‌ பஜார்‌ வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில்‌ பொதுமக்களுக்கு முக கவசத்தின்‌ முக்கியத்துவம்‌ பற்றிய விழிப்புணர்வும்‌ மேலும்‌ கவசம்‌ அணியாத நபர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்‌ பட்டு வருகின்றன.

போளூர்‌ பேருந்து நிலைய சாலையில்‌ ஆய்வாளர்‌ ஜெயபிரகாஷ்‌ முக கவசம்‌ அணியாதவர்களுக்கு அபராதம்‌ விதித்து முககவசம்‌ வழங்கி வந்தார்‌. அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில்‌ ஒட்டுனர்‌ மற்றும்‌ நடத்துனர்‌ இருவரும்‌ முக கவசம்‌ அணியாமல்‌ பயணிகளுடன்‌ பேருந்தை ஓட்டி வந்தனர்‌. உடனே, பேருந்தை மடக்கிய காவல்‌ ஆய்வாளர்‌ முக கவசம்‌ அணியாத ஓட்டுனர்‌ மற்றும்‌ நடத்துனர்‌ அபராதம்‌ விதித்து எச்சரித்து அனுப்பினார்‌.

Tags:    

Similar News