திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் நிறுத்தம் என தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம், போளூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் என மின் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-18 08:56 GMT

திருவண்ணாமலை அருகிலுள்ள நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை நல்லவன்பாளையம், அண்ணாநகர், தேனிமலை, எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாய்க் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய் யூர், சாவல்பூண்டி, அத்தியந் தல், சாந்திமலை,, கச்சிராப்பட்டு, ரமணா ஆஸ்ரமம் , புத்தியந் தல், காந்திபுரம், தென்மாத் தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், காம் பட்டு, கூடலூர், மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் பக்தவச்சலம் தெரிவித்துள்ளார்.

வேட்டவலம்

இதேபோல் வேட்டவலம் துணை மின்நி லையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன் னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூட லூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந் தாங்கல், அடுக்கம் மற்றும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சா ரம் நிறுத்தப்படும் மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

போளூர்

போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர் கெங்கவரம், கிடாம் பாளையம், மேல்சோழங்குப்பம் வீரளூர், சோழவரம், கேட் டவரம்பாளையம் பள்ளகொல்லை ஆகிய பகுதிகளில் மின் சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் குமரன் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News