போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிப்பு

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2138 மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

Update: 2022-05-27 06:49 GMT

பாலாற்றின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது.

போளூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2138 மது பாட்டில்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் போளூர் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது மது கடத்தல் போன்றவை மூலம் 2138 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்த மது பாட்டில்களை பாலாற்றின் அருகே வைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்தனர்.

கோட்ட கலால் அலுவலர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் புனிதா, ஆய்வாளர் ரகுபதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்..

Tags:    

Similar News