பிரியங்கா காந்தி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கைதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-10-04 13:43 GMT

பிரியங்கா கைதை கண்டித்து போளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் உத்திரபிரதேசத்தில் 8 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதையறிந்து அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற  பிரியங்கா காந்தியை தடுத்து கைது செய்த காவல்துறையை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் சத்தியன் தலைமையில் போளூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,  தியாகராஜன்,  ஜெயராமன்,  வின்சென்ட்,  காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் .

Tags:    

Similar News