சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2.5டன் ரேஷன் அரிசி மூட்டைகள் : போலீசார் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 .5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-19 08:27 GMT

திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்த கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள கீழ்கரிப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி ,மணி மற்றும் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற சரக்கு வேனை வழிமறித்த போலீசார் சோதனை நடத்த முயன்றனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் வேன் டிரைவர் உட்பட 2 பேர் தப்பிச் சென்றனர். இதன் பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய  வேனையும் பறிமுதல் செய்தனர் .மேலும் தப்பிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Tags:    

Similar News