வெம்பாக்கம் தாலுகா காகனம் பகுதியில் விஷம் குடித்து பெண் தற்கொலை

வெம்பாக்கம் தாலுகா காகனம் பகுதியில் விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2022-01-17 06:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே காகனம் கிராமம், தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60), விவசாயி. இவரது மனைவி பத்மாவதி (55). இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. பத்மாவதி,  அடிக்கடி உடல்நிலை பாதிப்பதால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர், இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து. தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News