போளூர், ஆரணி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

Update: 2021-12-10 06:05 GMT

செய்யாறு வட்டம்,  ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் உதவிகள் வழங்கப்பட்டன. 

திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யாறு, போளூர் ,ஆரணி ஆகிய பகுதிகளில்,  மனுநீதி நாள் முகாம்கள் மூலம்,  355 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செய்யாறு வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி,  மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று 172 பயனாளிகளுக்கு ரூபாய் 7.61 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். போளூர் வட்டத்தில் ஆரணி கோட்டாட்சியர்  கவிதா தலைமையில்,  62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News