செய்யாற்றில் அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுக்குழுக் கூட்டம்…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-23 05:49 GMT

அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, நகர அனைத்து வணிகா் சங்கங்களின் தலைவா் தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். செயலாளர் லியாகத் அலி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கணேசன், மாவட்ட நிா்வாகச் செயலாளர் அன்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மத்திய அரசு ஜிஎஸ்டியை ஒரே சீரான குறைந்த வரியாக அமல்படுத்த வேண்டும். செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வா்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும். எந்த நாட்டிலும் 22 சதவீதத்துக்கு மேல் வரி உயா்வு இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் 28 சதவீதம் வரி உயா்வு அமல்படுத்தப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்கவே முனைப்பு காட்டி வருகிறாா்கள்.

சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது கண்டனத்திற்குரியதாகும். உடனடியாக மத்திய அரசு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக நிறுத்த வேண்டும்.

பாரத பிரதமா் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் நடந்தால் வரிகளை ரத்து செய்வோம் எனக் கூறினாா். ஆனால், ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி வரி வசூல் செய்தும் ஜிஎஸ்டி குறைக்கப்படாமல் உள்ளது என்று விக்கிரமராஜா பேசினார்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல், பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகா், மாநில இணைச் செயலாள செந்தில்மாறன், மாவட்டத் தலைவா் மண்ணுலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News