திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மச்சாவு

செய்யாறு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2022-01-02 05:56 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வடபூண்டிபட்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் கூத்திரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிருந்தா (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று  இரவு பிருந்தா அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இறந்துவிட்டதாக ரமேஷ், கிருஷ்ணமூர்த்திக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிா்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் வடபூண்டிபட்டு கிராமத்திற்கு சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி மோரணம் போலீசில் கொடுத்த புகாரில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் பிருந்தா இறந்ததால் செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News