பத்தாயிரம் பனை விதை நடும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வட தண்டலம் கிராமத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2021-10-21 08:05 GMT

வட தண்டலம் கிராமத்தில் தொடங்கப்பட்ட பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வட தண்டலம் கிராமத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன்,  மேற்பார்வையில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் முன்னிலை யில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று ஏரிக்கரை பகுதியில் பனை விதைகள் நட்டு தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,  ஒன்றிய கவுன்சிலர்கள்,  ஊராட்சி மன்ற தலைவர்கள்,  பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News