செய்யாறு சிப்காட்டில் வடமாநில வாலிபர் கொலை

Crime News Tamil - செய்யாறு அருகே, வட மாநில தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

Update: 2022-09-07 10:18 GMT

பைல் படம்.

Crime News Tamil -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செல்ல பெரும்புலி மேடு அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் புதிதாக பல கம்பெனிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை, தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். துாசி போலீசார் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்டவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மாட்டேஷ், 45, என்பது தெரிந்தது

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு வந்ததாக தெரிவித்தனர். வடமாநில வாலிபரை நிர்வாணமாக்கி பின்னர் வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News