ஊரக வேலை திட்ட பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்ட புதிய குளம்

New Pond - சுதந்திர தினத்தன்று புதியதாக அமைக்கப்பட்ட குளத்தை கிராம மக்கள் திறந்து வைத்தனர்.

Update: 2022-08-16 01:48 GMT

புதியதாக அமைக்கப்பட்ட குளத்தை திறந்து வைத்து தேசிய கொடியை ஏற்றி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா.

New Pond - செய்யாறு வட்டம் தேத்துறை ஊராட்சியில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ரூபாய் 17 லட்சத்தில் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு கொண்டு புதிய குளம் அமைக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக புதிய குளம் திறப்பு விழா நடைபெற்றது.

குளப்பகுதியில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா தேசிய கொடியேற்றி வைத்து கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து பொறியாளர்கள், துணை தலைவர் தயாளன் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் ,கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News