செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-21 06:56 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா தவசி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 34), புரிசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த சரவணபிரியா (26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களிலே நாராயணமூர்த்தி, அவரது தாயார் கமலா, சகோதரி உமாமகேஸ்வரி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் வரதட்சணை கேட்டு சரவணபிரியாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரவணபிரியாவை ஆபாசமாக பேசி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சரவணபிரியா செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் நாராயணமூர்த்தியை கைது செய்தார். 

மேலும் தலைமறைவாக உள்ள கமலா, உமாமகேஸ்வரி, சங்கர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News