செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலி

செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலியானார்.

Update: 2022-05-03 10:15 GMT

செய்யாறு அருகே உள்ள வடதின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி ஜெயா (வயது 60). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25ம்தேதி,  வீட்டுக்குப் பின்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த குளவிகள் ஜெயாவை முகம், தலை, கால் ஆகிய பல இடங்களில் கொட்டி விட்டன. 

குளவி கொட்டியதால் உடலில் பல இடங்களில் வீக்கமடைந்து, வலியால் ஜெயா துடித்தார். அவரது மகன் சேட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது சம்பந்தமாக அனக்காவூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News