செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-09-07 14:18 GMT

செய்யாறு மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கோட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர பணி அமர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News