இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா

இலங்கை அகதிகள் முகாமில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2021-05-19 14:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அகதிகள் முகாமில் கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அகதிகள் முகாமில் சுமார் 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 22 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தப்பகுதியில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியை செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் மற்றும் வட்டாட்சியர் திருமலை, வட்டார மருத்துவர் ஷர்மிளா நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 121 நபர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News