பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி
செய்யாறு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாரத ஸ்டேட் வங்கியின் செய்யாறு கிளை சார்பில் பயனாளிகளுக்கு ரூபாய் 53 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்யாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 42 பேருக்கு ரூபாய் 10 லட்சமும், 5 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 43 லட்சமும் என கடன் உதவிகளை வங்கியின் முதன்மை மேலாளர் பாலாஜி வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.